கிடுகிடுவென உயரும் வெங்காயம் விலை - அரசின் பசுமை பண்ணை அங்காடிகளில் ரூ.45க்கு வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு

Oct 20 2020 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெங்காய விலை, கடுமையாக உயர்ந்து வருவதால், நாளை முதல் அரசின் பசுமை பண்ணை அங்காடிகள் மூலம் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கான வெங்காய தேவையில் 90 சதவிகிதத்தை கா்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களே பூர்த்தி செய்கின்றன. இந்த மாநிலங்களிலிருந்துதான் வெங்காயம் கொண்டு வரப்படுவது வழக்கம். தற்போது அந்த மாநிலங்களில் தொடர்ந்து கனமழை மழை பெய்து வருவதால், வெங்காய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெங்காயத்தை கொண்டு வருவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்திற்கு வரும் வெங்காயத்தின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் நேற்று 70 ரூபாய் வரை விற்பனையான வெங்காயம் இன்று கிலோ 100 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் நடுத்தர மக்‍கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். குறைந்த விலையில் மக்களுக்கு வெங்காயம் கிடைக்கும் வகையில், நாளை முதல் சென்னையில் 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. பின்னர் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கூட்டுறவு துறையின் பசுமை பண்ணை அங்காடிகள் மூலம் இதே விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00