கர்நாடகாவுக்கு கடத்தப்பட இருந்த 19 டன் ரேசன் அரிசியை வேலூரில் பறக்கும்படை குழுவினர் பறிமுதல்
Sep 28 2020 7:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவுக்கு கடத்தப்பட இருந்த 19 டன் ரேசன் அரிசியை, வேலூரில், பறக்கும்படை குழுவினர் பறிமுதல் செய்தனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில், கடந்த ஒரு மாதமாக, பறக்கும் படை குழுவினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் இருந்து வந்த கர்நாடக பதிவெண் கொண்ட லாரியை சோதனை செய்ததில், 19 டன் ரேசன் அரிசி, கர்நாடகாவுக்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்தது.