மதுரையில் தீபாவளிச் சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி - பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார்
Sep 28 2020 7:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில், தீபாவளிச் சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட பெண்கள், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த முத்தழகு-அமுதா தம்பதியர், கடந்த சில ஆண்டுகளாக, தீபாவளிச் சீட்டு நடத்தி வந்துள்ளனர். அதன் மூலம், பரவை, அதலை, இரும்பாடி, நடுபட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரிடம் 80 லட்சம் ரூபாய் வரை வசூலித்தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு சிலர், தாங்கள் கட்டிய பணத்தை திரும்பக் கேட்டபோது, பணம் தர மறுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் 100க்கும் மேற்பட்டோர், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.