கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கன்னட அமைப்பினர் கண்டன ஆர்பாட்டம்
Sep 28 2020 7:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக, கர்நாடக மாநில எல்லையில் மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, கன்னட அமைப்பினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில், வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, கன்னட ரக்ஷன வேதிகே மற்றும் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை, போலீசார் கைது செய்தனர்.