வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொல். திருமாவளவன் தலைமையில் கடலூரில் ஆர்ப்பாட்டம்
Sep 28 2020 7:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் திரு. தொல். திருமாவளவன் தலைமையில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். அப்போது மோடி அரசு எடுக்கக்கூடிய கட்டுப்பாடுகளுக்கு அடங்கி கிடக்கக்கூடிய அரசாக எடப்பாடி அரசு இயங்கி வருவதாக அவர் குற்றம்சாட்டினர்.