காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து போராட்டம்
Sep 28 2020 4:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து, காரைக்கால் போராளிகள் குழுவினர், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் மேற்கூரை உடைந்து விழுந்ததில், நோயாளி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கை கண்டித்து, காரைக்கால் போராளிகள் குழு சார்பாக 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.