சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - சட்டமன்ற உரிமைக்குழு சார்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல்
Sep 28 2020 4:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசுக்கு விதித்த தடையை நீக்க கோரி சட்டமன்ற செயலாளர் மற்றும் உரிமைக்குழு தலைவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்றத்துக்குள் நடைபெறும் உரிமைக்குழு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், நோட்டீஸ் மீது எந்த முடிவும், கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நீதிமன்றம் தலையிட எந்த அவசியமும் இல்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.