சென்னை எண்ணூர் விரைவு சாலையில் கண்டெய்னர் லாரிகள் மோதிய விபத்து - 3 பேர் பலி
Sep 28 2020 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை எண்ணூர் விரைவு சாலையில் வெவ்வேறு கண்டெய்னர் லாரிகள் இருசக்கர வாகனங்களில் மோதிய விபத்துகளில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம் மஞ்சம்பாக்கத்திலிருந்து காசிமேடு ஜீரோ கேட் வரை நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள் ஏற்றுமதி இறக்குமதிக்காக சென்று வருகின்றன. இந்நிலையில் ஓட்டுநர்களின் அலட்சியம் காரணமாக இப்பகுதியில் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.