ராஜீவ் கொலை வழக்கு ராபர்ட் பயஸின் மனைவி பெயர் தடைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்
Sep 28 2020 4:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜீவ் கொலை வழக்கு ஆயுள் கைதியான ராபர்ட் பயஸின் மனைவி பிரேமாவின் பெயர் தடைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள தன் மனைவி பிரேமாவிற்கு தன்னை சந்திக்க இந்தியா வருவதற்கு விசா வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராபர்ட் பயாஸ் கடந்த ஆண்டு இறுதியில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது.