சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று மண்டல வாரியாக அமமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம்
Sep 28 2020 1:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்சென்னை தெற்கு, செங்கல்பட்டு வடக்கு உட்பட மண்டல வாரியாக, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டச்செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைமைக்கழக அலுவலகத்தில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. கழகப் பொருளாளர் திரு.P. வெற்றிவேல், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.ஆர்.மனோகரன், கழக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி சி.ஆர்.சரஸ்வதி, தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், கழக தேர்தல் பிரிவுச் செயலாளருமான திரு.ஜி.செந்தமிழன், செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளரும், பொறியாளர் அணிச் செயலாளருமான திரு.ம.கரிகாலன் உள்ளிட்ட மாவட்டக்கழகச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். சமூக இடைவெளியை கடைபிடித்து இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்க வந்த கழக நிர்வாகிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு, கிருமி நாசினியும் வழங்கப்பட்டது.
இதனிடையே, செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் திரு.கரிகாலன், தனது மாவட்ட உறுப்பினர் சேர்க்கை படிவங்களை, கழகப் பொருளாளர் திரு.P. வெற்றிவேல், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.ஆர்.மனோகரன், கழக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி சி.ஆர்.சரஸ்வதி, தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், கழக தேர்தல் பிரிவுச் செயலாளருமான திரு.ஜி.செந்தமிழன் ஆகியோரிடம் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பின்னர், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை, செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளர் திரு.கோதண்டபாணியிடம், தலைமைக்கழக நிர்வாகிகள் வழங்கினர்.
இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை தலைமை கழக நிர்வாகிகள், காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் திரு.மொளச்சூர் இரா. பெருமாளிடம் வழங்கினர்.