நாகையில் வீட்டில் கட்டி இருந்த ஆடுகளை சொகுசு காரில் கடத்தும் திருடர்களால் பொதுமக்கள் அச்சம்
Sep 28 2020 9:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை அருகே வீட்டில் கட்டி இருந்த ஆடுகளை சொகுசு காரில் கடத்தும் திருடர்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் வீட்டில் வளர்த்து வரும் 30 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகளை மர்ம நபர்கள் சொகுசு காரில் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ஆடு திருட்டு குறித்து கீழையூர் காவல் நிலையத்தில் குணசேகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.