தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று - ஒரேநாளில் 5,679 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்
Sep 25 2020 6:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் மேலும் 72 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இன்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 679 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக, தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில், கொரோனா வைரஸ் காரணமாக 72 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 148 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 193 பேர், வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 926 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 626 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்து 13 ஆயிரத்து 836 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் 661 பேருக்கும், சேலத்தில் 297 பேருக்கும், செங்கல்பட்டில் 277 பேருக்கும், கடலூரில் 235 பேருக்கும் திருவள்ளூரில் 229 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.