மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் துரைக்கண்ணு பேட்டி
Sep 25 2020 6:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் திரு. துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகத்தில் வேளாண் அமைச்சர் திரு. துரைக்கண்ணு, வேளாண்துறை செயலாளர் திரு. சுகன்தீப் சிங் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர், விவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காகவே வேளாண் சட்டங்களை முதலமைச்சர் ஆதரித்ததாக தெரிவித்தார்.