நடிகர்கள் சூர்யா, விஜய் பற்றி அவதூறாகப் பேசிய மீராமிதுனுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் - அடுத்தவரை பழித்து கோட்டை கட்டினால் அது மண்கோட்டையாகத்தான் இருக்கும் என்றும் கருத்து
Aug 10 2020 6:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகர்கள் சூர்யா, விஜய் பற்றி அவதூறாகப் பேசிய மீராமிதுனுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அடுத்தவரைத் தூற்றிப் பழித்து அதில் கோட்டை கட்டினால் அது மண்கோட்டையாகத்தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
திரு. பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர்கள் விஜய், சூர்யா போன்றோர், திருமணம் செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை, அழகுற கட்டமைத்துள்ளனர் என்பதை இத்தனை ஆண்டுகால அவர்களின் வாழ்க்கை நம் முன் கண்ணாடி போல் நிற்பதாகத் தெரிவித்துள்ளார். அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல மீராமிதுன் என்கிற பெண் தன் வார்த்தைகளை கடிவாளம் போடாமல் வரம்புமீறி சிதறியிருப்பதாகவும், சிறு பெண், பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கவுரமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்றும் பாரதிராஜா தெரிவித்துள்ளார். சூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கும் பணி செய்கிறார் - சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் என குறிப்பிட்டுள்ள பாரதிராஜா, அடுத்தவரைத் தூற்றிப், பழித்து அதில் கோட்டை கட்டினால் அது மண்கோட்டையாகத்தான் இருக்கும் என்றும் பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.