மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை : அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்வு

Aug 10 2020 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை காரணமாக, நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 92 புள்ளி எட்டு பூஜ்யம் அடியாக இருந்த நிலையில், மேலும் 4 அடி உயர்ந்து, 97 புள்ளி இரண்டு பூஜ்யம் அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல், சேர்வலாறு, மணிமுத்தாறு, நம்பியாறு, வடக்‍குபச்சையாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதேபோல், தென்காசி மாவட்டத்திலும் முக்‍கிய அணைகளுக்‍கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் அதிகம் விழுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்‍ கொட்டுகிறது.

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்‍கிய அணைகளுக்‍கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 34 புள்ளி நான்கு பூஜ்யம் அடியாக உயர்ந்துள்ளது. குமரிக்‍ குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாத் தலங்களுக்கு தடை விதிக்‍கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00