நீலகிரி மலைப்பாதையில் 10 மீட்டர் நீளத்திற்கு பிளவு : பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தம்
Aug 10 2020 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்து வரும் கனமழை காரணமாக, மலைப்பாதையில் பிளவு ஏற்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கூடலூரில் இருந்து நாடுகாணி வழியாக கேரள மாநிலத்திற்கு, அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், தமிழக எல்லையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் சாலையின் நடுவே 10 மீட்டர் நீளத்திற்கு பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இரு மாநில போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்வதாலும், பிளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாலும், அடிவாரத்தில் உள்ள யானைமரி கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.