நெல்லையில் காதல் ஜோடிக்கு மிரட்டல் - அடித்து உதைத்த மர்மக் கும்பல் : பணம், செல்போனை பறித்துச் சென்றனர்
Aug 10 2020 4:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லையில் காதலர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் , விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற கும்பலில் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே மலையை குடைந்து மதுரை- நாகர்கோவில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை கார், இருசக்கர வாகனத்தில் கடக்கும் பலரும் செல்பவர்கள் செல்பி எடுத்து கொள்வது வாடிக்கை. கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பிறகு இப்பகுதியில் வழிப்பறி கொள்ளை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வடமாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலனுடன் மலை உச்சிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த கும்பல், இருவரையும் மிரட்டி தரையில் அமர செய்ததோடு அவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர். அவர்களிடம் இருந்து பணம் செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய நெல்லை முன்னீர்பள்ளத்தை சேர்ந்த அருணாசலம் என்பவர் கைது செய்யபட்டார்.