ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி வாகை சூடிய மாற்றுத்திறனாளிகள் பூரண சுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் உள்ளிட்டோருக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து - இந்த வெற்றி பலருக்கும் ஒளிவிளக்காகத் திகழும் என கருத்து
Aug 6 2020 11:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி வாகை சூடிய மாற்றுத்திறனாளிகள் பூரண சுந்தரி, பாலநாகேந்திரன் உட்பட வெற்றிபெற்ற அனைவருக்கும் அமமுக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய குடிமைப்பணிகள் எனப்படும் IAS தேர்வில் வெற்றி வாகை சூடி இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். இந்த தேர்வில் எளிய குடும்பங்களைச் சேர்ந்த பலர் சாதனை புரிந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதிலும் குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளான செல்வி. பூரண சுந்தரி, திரு.பாலநாகேந்திரன் போன்றோர் ஐ.ஏ.எஸ் தேர்வில் பெற்றிருக்கும் வெற்றி, பலருக்கும் ஒளிவிளக்காக திகழும் என்றும், அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துகள் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.