தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு - சென்னையில் இன்று மேலும் 15 பேர் பலி
Aug 6 2020 11:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் கொரோனா பாதிப்புக்கு மேலும் 15 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில், ஏற்கெனவே மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், மேலும் 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 2 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் ஒருவரும், தனியார் மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.