திருவட்டாரில் பரளியாற்றில் கலக்கும் ஆபத்து நிறைந்த குப்பைகள் : தொற்று நோய்கள் பரவும் அபாயம்-பொதுமக்கள் அச்சம்
Aug 4 2020 6:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் பாய்ந்தோடும் பரளியாற்றில் பேரூராட்சி ஊழியர்கள் குப்பைகளை கலப்பதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ளது மோளியடி மலையிலிருந்து உற்பத்தியாகி பெருஞ்சாணி, வலியாற்றுமுகம், மாத்தூர் தொட்டிபாலம், அருவிக்கரையை கடந்து திருவட்டார் பகுதியில் பரளியாற்றின் கரையில் பேரூராட்சிக்குக்குட்பட்ட குப்பைகளை சேகரித்து பிளாஸ்டிக் குப்பைகளை பிரித்தெடுக்கும் நிலையம் உள்ளது. பிரித்தெடுக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை திருவட்டார் பேரூராட்சி பணியாளர்கள் அருகில்
உள்ள பரளியாற்றின் படித்துறையில் கொட்டி அதை தீவைத்து எரித்த பின் எரியாத நிலையிலுள்ள குப்பைகளை பரளியாற்றில் கலக்கி வருகின்றனர். இதனால் டெங்கு போன்ற நோய்கள் பரவும் ஆபத்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.