பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : நீரிப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை எதிரொலி
Aug 4 2020 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களில் சுமார் ஆயிரத்து 800 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக பொதுப்பணித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பவானிசாகர் அணை ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் சுமார் 3 லட்சம் ஏக்கருக்கு மேல் பாசன பரப்பிற்கு நீராதாரமாகவும் உள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சுமார் ஆயிரத்து 800 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்தனர். இன்று காலை 3 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக உயர்ந்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கின்றது.