கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் மதகுகளின் கதவுகள் மாற்றும் பணி நிறைவு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு
Aug 4 2020 6:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.ஆர்.பி அணையில் மதகுகளின் கதவுகளை மாற்றும் பணி நிறைவடைந்ததையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த ஜனவரி மாதம் 2 -ம் தேதி புதிய தொழில்நுட்பத்துடன் அதிக பணியாளர்களை கொண்டு பணிகள் தொடங்கப்பட்டு 7 மாதங்களில் அணையின் கதவுகளை மாற்றும் பணிகள் முடிக்கப்பட்டன. இதையடுத்து பொதுப்பணித் துறை தலைமை செயற்பொறியாளர் திரு. அசோக், கே.ஆர்.பி அணையை ஆய்வு செய்தார். தற்போது முழு பணிகளும் முடிவடைந்ததால், அணையில் தண்ணீர் முழுமையாக தேக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.