தமிழ்நாட்டில் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்தது : பொதுமக்கள் அதிக கவனத்தோடு இருக்கவேண்டும் - சுகாதாரத்துறைச் செயலாளர்
Aug 4 2020 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை தற்போது குறைந்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் அதிக கவனத்தோடு இருக்கவேண்டும் என தமிழக அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை குறித்து, தமிழக அரசு சுகாதாரத்துறைச் செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தின் பல இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணிவதை சரியாக பின்பற்றவில்லை எனக் குற்றம் சாட்டிய திரு. ராதாகிருஷ்ணன், திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 118 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.