கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியருக்கு கொரோனா உறுதி
Jul 11 2020 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்த செவிலியருடன் பணிபுரிந்த மற்றொரு செவிலியர் மற்றும் தூய்மைப் பணியாளர் ஆகிய இருவரிடம் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த வெளிநோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்கும் பகுதியில் இந்த இருவரும் பணியாற்றியதால், அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அந்தப் பகுதி அடைக்கப்பட்டுள்ளது.