சங்கரன்கோவில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா : முழு ஊரடங்கிற்கு தயார் என நகர வர்த்தக சங்கம் அறிவிப்பு
Jul 11 2020 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், முழு ஊரடங்கை அமல்படுத்த தயாராக இருப்பதாக நகர வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. நகர வர்த்தக சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம், வியாபாரிகள் சங்க தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில், வரும் செவ்வாய்க்கிழமை முதல், நகரில் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. உணவகங்கள் மட்டும் கூடுதலாக மாலை 6 மணி வரை செயல்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.