லடாக் எல்லைக்கு இராணுவ தளவாடங்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு - ராணுவ வீரர் அழகுராஜனின் உடல், சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம்

Jul 11 2020 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

லடாக் எல்லைக்கு இராணுவ தளவாடங்களை ஏற்றிச் சென்ற போது வாகனம் விபத்தில் பலியான தேனி மாவட்டத்தை சேர்ந்த அழகுராஜனின் உடல், இராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம், குச்சனூர் அருகே உள்ள துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர்அழகுராஜன். இவர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ராணுவப் பிரிவு ஓட்டுனராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 9 ஆம் தேதி புவனேஷ்வரில் இருந்து ராணுவத் தளவாடங்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு லடாக் முகாமிற்கு அழகு ராஜா சென்றபோது, வாகனம் விபத்தில் சிக்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அழகுராஜாவின் உடல் இன்று அதிகாலை அவரது சொந்த ஊரான குச்சனூர் துரைசாமிபுரத்திற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் ஊர்வலமாக மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00