சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையில் வேகம் காட்டும் சிபிஐ - மனைவி, மகள் மற்றும் உறவினர்களிடம் 4 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை - அரசு மருத்துவமனையிலும் விசாரணை
Jul 11 2020 5:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தந்தை, மகன் இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான் குளத்தில் சிபிஐ போலீசார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்தனர். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, காவல்துறை ஆய்வாளர் உட்பட ஏற்கெனவே 8 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி போலீசார் ஏற்கெனவே விசாரணையைத் தொடங்கி முழுவீச்சில் அதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சிபிஐ-யும் களத்தில் இறங்கியுள்ளது. விசாரணைக்கு முன்னதாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு சுற்றுலா மாளிகையில் சிபிசிஐடி போலீசாரிடம் சிபிஐ அதிகாரிகள் இதுகுறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடர்பான விவரங்கள் அடங்கிய சீலிட்ட உறையை வழங்கினர். இதன் தொடர்ச்சியாக சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் திரு. விஜய்குமார் சுக்லா தலைமையிலான போலீசார் சாத்தான்குளம் சென்று அங்குள்ள ஜெயராஜின் இல்லத்தில் அவரது மனைவி உள்ளிட்டோரிடம் பல மணி நேரமாக விசாரணை நடத்தினர். பின்னர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையிலும் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.