ஊரடங்கு காரணமாக பூக்களை விற்பனை செய்ய முடியாத நிலை : அரசு எவ்வித உதவிகளையும் செய்யவில்லை என புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேதனை

Jul 11 2020 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள புதுக்கோட்டை மாவட்ட பூ விவசாயிகள், அரசு எவ்வித உதவியும் செய்யாமல் வெற்று அறிக்கையை மட்டுமே விட்டுவருவதாக வேதனையுடன் கூறியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம், செட்டியபட்டி, திருவரங்குளம், ஆலங்குடி வடகாடு, கீரமங்கலம், மாஞ்சான் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் பூக்கள் பயிரிட்டு வருகின்றனர். சம்பங்கி, மல்லிகை, ரோஜா, கோழிக்கொண்டை கனகாம்பரம் உள்ளிட்ட மலர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக பூக்களை சந்தைக்கு எடுத்து சென்று வியாபாரம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால், 500 ரூபாய் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட சம்பங்கிப்பூ 30 அல்லது 40 ரூபாய்க்கு மட்டுமே விலை போவதாகவும், அவ்வாறு விற்பனை செய்யப்படும் பூக்களையும் வாங்குவதற்கு ஆள் இல்லாததாலும் பூக்களைத் தோட்டத்திலேயே கொட்டி உரமாக்கும் சூழல் நிலவுவதாகவும் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர். தோட்டக்கலைத் துறையினர் இப்பகுதிக்கு வரவே இல்லை என்பதையும் சுட்டிக்காட்டும் அவர்கள், மானியம் கொடுப்பதாக அரசு வெற்று அறிக்கை மட்டுமே வெளியிடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00