மயிலாடுதுறையில் உள்ள குளங்களுக்கு காவிரி நீர் வழங்கப்படாததை கண்டித்து குளத்தில் இறங்கி பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம்
Jul 11 2020 12:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறையில் உள்ள குளங்களுக்கு காவிரி நீர் வழங்கப்படாததை கண்டித்து குளத்தில் இறங்கி பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறையில் 55 குளங்கள் மற்றும் 33 குட்டைகள் அமைந்துள்ளன. காவிரி நீர் வரும்போது கிளை வாய்க்கால்கள் வழியே இந்த நீர் நிலைகளுக்கு தண்ணீர் திறக்கப்படும். தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படாததால், குளத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால், மயிலாடுதுறையில் நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில், குளங்களுக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, பொதுத்தொழிலாளர் சங்கம், ஓவியர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் ஏராளமானோர் குளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.