கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பாரத ஸ்டேட் வங்கி பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்த மூன்று பேர் கைது
Jul 11 2020 12:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பாரத ஸ்டேட் வங்கி பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். எல்.என்.புரம் ஸ்டேட் பேங்க் நகரை சேர்ந்த சையது கலில் என்பவரின் மகன் கமால்பாபு, தான் ஒரு வங்கி மேலாளர் எனக்கூறி, போலி ஆவணங்கள், போலி ரப்பர் ஸ்டாம்ப் உள்ளிட்டவற்றை தயாரித்துள்ளார். பண்ருட்டி நார்த் பஜார் பாரத ஸ்டேட் வங்கி என்ற போலியான இணையதளத்தை உருவாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், கமால்பாபு மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஈஸ்வரி, மாணிக்கம், குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.