மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளான திருமழிசை காய்கறி சந்தை - சீரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர்
Jul 11 2020 11:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருமழிசை தற்காலிக காய்கறி சந்தைப் பகுதியில் மழையால் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக சந்தை மூடப்பட்டு, திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. இங்கிருந்து காய்கறிகளை மொத்த வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு பெய்த கனமழையால் காய்கறி சந்தையில் நீர் அதிகளவில் தேங்கியது. இதனால் சந்தைக்கு வரும் வியாபாரிகளின் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், மின் மோட்டார் மூலம் நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் திரு. கார்த்திகேயன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர், பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.