சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் காட்டு மாடு ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சம்
Jul 11 2020 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் காட்டு மாடு ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக, குளுகுளு பிரதேசமான ஏற்காடு மலைப்பகுதி தற்போது சுற்றுலாப்பயணிகளின் வருகை இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் அங்கு அவ்வப்போது காட்டு விலங்குகள் ஊடுருவது அதிகரித்து வருகிறது. இன்று அதிகாலை ஏற்காடு ஐந்து ரோடு பகுதியில் காட்டு மாடு உலவிக்கொண்டிருந்தது. அவ்வழியாக சென்ற பொதுமக்களை பார்த்ததும் அது துரத்தியதால் அவர்கள் அச்சமடைந்தனர். வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்காடு பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.