சென்னையில் கொரோனா பலி நாளுக்குநாள் அதிகரிப்பு - இன்று மட்டும் 24 பேர் உயிரிழப்பு
Jul 11 2020 11:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று காலை 9 மணி நிலவரப்படி, 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கொரோனாவிற்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று மட்டும் இதுவரை 24 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 9 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருவரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் என மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.