வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தவர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Jul 11 2020 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தவர்களில், 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், இலங்கையில் இருந்து வந்த 4 பேர் - ஒமென், ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா 3 பேர் - கிர்கிஸ்தான், கத்தார் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா 2 பேர் - ஆர்மேனியா, கென்யா, குவைத், சவூதி அரேபியா, வளைகுடா நாடுகள் ஆகியவற்றில் இருந்து வந்த தலா ஒருவர் அடங்குவர். அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 534 ஆக உயர்ந்துள்ளது. இதில் 252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.