காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு - கைதான 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்
Jul 11 2020 12:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில், தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில், பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி, சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில், அப்துல் சமீம், தவுஃபிக், காஜா மொஹிதீன், மெஹபூப் பாஷா, இஜாஸ் பாஷா, ஜாஃபர் அலி ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். தொடக்கத்தில் தமிழக காவல்துறை விசாரித்து வந்த நிலையில், வழக்கு பின்பு என்.ஐ.ஏ., வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 6 பேருக்கு எதிராக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.