ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டில் அனுமதிக்‍கப்பட்டுள்ள நோயாளிகள் உரிய நேரத்தில் உணவு கிடைக்‍காமல் பரிதவிப்பு - மருத்துவமனை நிர்வாகம் அலட்சியப் போக்‍குடன் செயல்படுவதாக வேதனை

Jul 9 2020 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டில் அனுமதிக்‍கப்பட்டுள்ள நோயாளிகள் உரிய நேரத்தில் உணவு கிடைக்‍காமல் பரிதவித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 300க்‍கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். 33 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரேனாவால் பாதிக்‍கப்பட்டு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ள நோயாளிகள், உரிய வசதிகளின்றி பெரும் இன்னலுக்‍கு ஆளாகியுள்ளனர். உரிய நேரத்தில் குடிநீர், உணவு கிடைக்‍காமல் பசியால் பரிதவித்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து கொரோனா சிகிச்சை மையங்களிலும் இதேபோன்ற அவலம் நிலவுவதாக கூறுகின்றனர். அதிகாரிகள் கொரோனா வார்டில் ஆய்வு நடத்துவதில்லை என்பதால் மருத்துவமனை நிர்வாகம் இவ்விஷயத்தில் அலட்சியப் போக்‍குடன் நடந்து கொள்வதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00