8 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையில் களைகட்டியுள்ள குறுவை சாகுபடி - முறை வைக்காமல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
Jul 9 2020 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடி பணிகள் களைகட்டியுள்ளன.
தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக, கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதையடுத்து, நான்கு நாட்களுக்கு பிறகு கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 13 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்படும் நிலையில், தஞ்சை மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பாலைவனம் போல் காட்சி அளித்த தஞ்சை மாவட்டம், தற்போது காணுமிடமெல்லாம் நாற்றாங்களாக காணப்படுகிறது. நாற்று நடும் பணியிலும், உழவோட்டம் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.