சாத்தான்குளம் இரட்டைக்‍கொலை வழக்‍கில் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் தொடர்ந்த ஜாமின் மனு - விசாரணையை வரும் 13-ம் தேதிக்‍கு ஒத்திவைத்தது தூத்துக்‍குடி மாவட்ட நீதிமன்றம்

Jul 9 2020 6:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாத்தான்குளம் இரட்டைக்‍கொலை வழக்‍கில் குற்றம்சாட்டப்பட்டிருக்‍கும் ஆய்வாளர் உள்ளிட்டோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 13-ம் தேதிக்‍கு ஒத்தி வைக்‍கப்பட்டுள்ளது.

தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேரை ஏற்கெனவே கைது செய்தனர். அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சாத்தான்குள காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, வெயில்முத்து, சாமத்துரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய மேலும் 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு 5 காவலர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் செல்லத்துரை, வெயில்முத்து, சாமத்துரை ஆகியோர் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறைக்‍காவலில் அடைக்‍கப்பட்டனர்.

முன்னதாக இவ்வழக்‍கில் கைதாகியிருக்‍கும் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஜாமீன் கோரி மனுத்தாக்‍கல் செய்தனர். இந்த வழக்‍கு இன்று விசாரணைக்‍கு வர இருந்த நிலையில், மனுதாரர்கள் கேட்டுக்‍ கொண்டதன் அடிப்படையில், இவ்வழக்‍கின் விசாரணையை வரும் 13-ம் தேதிக்‍கு தூத்துக்‍குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00