சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் - பணியின்போது போலீசார் மிரட்டியதற்கு எதிர்ப்பு
Jul 9 2020 4:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை நீலாங்கரையில், மாநகராட்சி ஊழியரை தரக்குறைவாக பேசிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மண்டல அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள வளர்ந்த மரத்தை வெட்டும்படி, மாநகராட்சி ஜே.சி.பி. ஊழியர் திரு. ஆறுமுகத்திடம், நீலாங்கரை காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. விக்ரமன் கூறியதாக தெரிகிறது. இதற்கு மறுப்புத்தெரிவித்த ஆறுமுகத்தை, காவலர் விக்ரமன் தகாத வார்த்தைகளால் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காவலர் விக்ரமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சோழிங்கநல்லூரில் உள்ள மண்டல அலுவலகத்தில், 500-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.