கன்னியாகுமரியில் வியாபாரிகளை மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டுவதாக புகார்
Jul 9 2020 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில், வருமானமின்றி தவித்துவரும் வியாபாரிகளிடம் கடைகளை இடிக்கப்போவதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அத்துமீறி வருவதாக ஆணையரிடம் வணிகர் சங்கங்களின் பேரவையினர் புகார் மனு அளித்தனர். நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இந் நிலையில், கடைகளை இடிக்கப்போவதாக மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆணையரிடம் வணிகர் சங்கங்களின் பேரவையினர் புகார் மனு அளித்தனர்.