அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நவம்பர் கூடுதலாக 5 கிலோ அரிசி - தமிழக அரசு அறிவிப்பு
Jul 6 2020 2:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இம் மாதம் 1-ம் தேதிமுதல் 3-ம் தேதிவரை பணம் கொடுத்து அத்தியாவசியப் பொருட்களான துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை நியாயவிலைக் கடையில் வாங்கிய குடும்ப அட்டைதாரர்களுக்கு அதற்கான தொகை ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஈடுசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் மாதம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.