ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு - வரும் 15-ம் தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க முடிவு
Jul 6 2020 2:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கொரோனா தடை உத்தரவால் பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகளை பள்ளி நிர்வாகங்கள் நடத்தி வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் திரு. M.M.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் திரு. சங்கரநாராயணன், ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வரும் 15-ம் தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிடவுள்ளதாக தெரிவித்தார்.
அதுவரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வரும் 20-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.