ஆன்லைன் வகுப்புகளுக்‍கு தடைவிதிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு - வரும் 15-ம் தேதிக்‍குள் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்‍க முடிவு

Jul 6 2020 2:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆன்லைன் வகுப்புகளுக்‍கு தடை விதிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கொரோனா தடை உத்தரவால் பள்ளிகள் திறக்‍கப்படாத சூழ்நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகளை பள்ளி நிர்வாகங்கள் நடத்தி வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍குகள் தொடரப்பட்டன. இந்த வழக்‍கு இன்று மீண்டும் விசாரணைக்‍கு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் திரு. M.M.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்‍கறிஞர் திரு. சங்கரநாராயணன், ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வரும் 15-ம் தேதிக்‍குள் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிடவுள்ளதாக தெரிவித்தார்.

அதுவரை ஆன்லைன் வகுப்புகளுக்‍கு தடைவிதிக்‍க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்‍கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வரும் 20-ம் தேதிக்‍கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00