கொரேனா பரவலைத் தடுக்க நடவடிக்கை : ராமநாதபுரம் நகரில் இன்றுமுதல் ஒருவார காலத்திற்கு நகைக் கடைகள் மூடல்
Jul 6 2020 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் நகரில் கொரோனா தொற்று பரவி வருவதால், அதனைத் தடுக்கும் விதமாக, நகை வியாபாரிகள் இன்று முதல் வரும் 12-ஆம் தேதி வரை முழு நேரம் கடையடைப்பு செய்வதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக, ராமநாதபுரம் நகரில் 800க்கும் மேற்பட்ட நகைக் கடைகள் ஒரு வார காலம் முழுநேரம் மூடப்படுகிறது. இதனால், எப்போதும் பரபரப்பாக இருக்கும் பெரிய பஜார் நகை கடை பஜார் வெறிச்சோடி காணப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.