செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கில் தளர்வு - வழக்கம்போல் வாகனங்கள் இயங்கின
Jul 6 2020 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், இன்றுமுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வழக்கம் போல் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் இயங்கத் தொடங்கின. செங்கல்பட்டு, மதுராந்தகம், கூடுவாஞ்சேரி, தாம்பரம், வண்டலூர், ஊரப்பாக்கம் உட்பட மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் வழக்கம் போல் வாகனங்கள் இயங்க தொடங்கின. இன்று காலை முதல் ஆட்டோக்கள், டாக்சிகள், இயக்கப்படுகின்றன.