ஈரோட்டில் ஒரேநாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 248 ஆக உயர்வு
Jul 6 2020 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோட்டில் கொரேனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 248 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 17 ஆண்கள், 9 பெண்கள் என 26 பேர் என புதிதாக 26 பேருக்கு கொரேனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில், தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா அதிகம் பரவும் பகுதிகளில், பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.