சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை
Jul 6 2020 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொண்டலாம்பட்டி அருகேயுள்ள ஒன்பதாம் பாலி பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உறவினருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கோரிமேடு அருகேயுள்ள அரசு மகளிர் கல்லூரியில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில், அந்தப் பெண், நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தெரியாததால், முகாமில் உள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.