வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்களில் சென்னை வந்த பயணிகளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Jul 6 2020 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்து, குவைத், கத்தார், பக்ரைன், ஆகிய நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்களில் சென்னை வந்த பயணிகளில், 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முகாமில் தங்கியிருந்தவர்களை மீண்டும் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில், குவைத்தில் இருந்து வந்த 9 பேர் - கத்தாரில் இருந்து வந்த 7 பேர் - பக்ரைனில் இருந்து வந்த 3 பேர் - இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 432 ஆக உயர்ந்தது.