ப்ளஸ்-1, ப்ளஸ்-2 வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்டமே தொடரும்- பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து முடிவை மாற்றியது தமிழக அரசு
Jul 6 2020 12:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
+1, +2 வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த புதிய பாடத்தொகுப்பு முறையை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
+1, +2 வகுப்புகளில் பழைய பாடத்தொகுப்பு முறையில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் 14 பிரிவுகளில் இடம்பெற்றிருந்தன, கணிதம் 6 பிரிவுகளில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட புதிய பாடத்தொகுப்பு முறைக்கான அரசாணையில், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் 3 பிரிவுகளிலும், கணிதம் 2 பிரிவுகளிலும் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இந்த புதிய பாடத்தொகுப்பு முறையால், மாணவர்கள் உயர்கல்வி மற்றும் வேலைக்கான வாய்ப்புகளை இழக்க நேரிடும் என கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து, +1, +2 வகுப்புகளில் பழைய பாடத்தொகுப்பு முறையே தொடரும் என்றும், புதிய பாடத்தொகுப்பு முறை ரத்து செய்யப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.