சாத்தான் குளம் இரட்டை கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பயன்படுத்திய காரின் உரிமையாளர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் - ஆவணங்களை காண்பித்து விளக்கம்
Jul 6 2020 2:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பயணம் செய்த காரின் உரிமையாளர் இன்று CBCID அலுவலகத்தில் ஆஜரானார்.
சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சாத்தான்குளம் காவல்ஆய்வாளர் ஸ்ரீதர், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து தப்பிச் சென்றபோது, கோவில்பட்டியில் கைது செய்யப்பட்டார். அவர் பயணித்த கார் குறித்து மர்மம் நிலவியது. அந்தக் கார், சென்னை முகப்பேரைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்குச் சொந்தமானது என்றும், அது எப்படி ஸ்ரீதரிடம் வந்ததென்றும் கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், ரமேஷ் இன்று தூத்துக்குடி CBCID அலுவலகத்தில் ஆஜராகி, தனது காருக்கான ஆவணங்களைக் காண்பித்து விளக்கம் அளித்தார்.