மதுரை அருகே தமிழ் பிராமி எழுத்து பொறுக்கப்பட்ட கல்தூண் கண்டுபிடிப்பு - கி.மு. 3ம் நூற்றாண்டை சேர்ந்தது என தகவல்
Jul 6 2020 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை அருகே, கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலம் கிராமத்தில் உள்ள ஏகநாதசுவாமி மடத்தில் இருந்த கல்தூண் ஒன்றில், கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதை தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்த கல்தூணில் 'ஏகன் ஆதன் கோட்டம்' என்ற தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், இது, ஆண்டிப்பட்டி அருகே புலிமான் கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லுக்கு இணையானது என்றும் தெரியவந்துள்ளது. இந்த தமிழி எழுத்துக்கள், தமிழர்கள் பின்பற்றிய சமயம், பண்பாடு, கட்டிடக்கலை ஆகியவற்றை குறிப்பிடுவதாகவும், தமிழிலக்கியங்கள் அன்றி முதல் முதலாக தமிழ் பிராமி என்று அழைக்கப்படும் "தமிழி" எழுத்துகள் கிடைத்திருப்பதாகவும் தொல்லியல் ஆய்வாளர் திரு.காந்திராஜன் தெரிவித்தார்.